Friday, 3 August 2018

Living with the Himalayan Masters

கடவுளை நேரில் காண முடியுமா?

முடியும் என்கிறது Living With The Himalayan Masters.

1976 முதல் 20 வருடங்கள் ராஜ்மானி திகுநாய்த் என்பவர் ராமாவுக்கு சீடராக இருந்து விடை பெறும் போது ராமா தன் அனுபவங்களை சொல்ல ஆரம்பிக்கிறார்... உருவாகிறது Living With The Himalayan Masters.

இது வழக்கமான ஆன்மீக புத்தகம் அல்ல. கடவுள்‌‌, வாழ்க்கை, உலகம், அரசியல், மதம், போலி சாமியார்கள் என்று பல கேள்விகளுக்கு அழகான கதைகள் மூலம் சுவாரசியமாக விடை அளிக்கிறது இந்நூல்.

இமயத்தில் ஒரு துறவி யாசகம் கேட்டு ஒரு வீட்டின் முன் நிற்கிறார். சாப்பிட்டு முடித்ததும் அந்த கணவன் மனைவியிடம் "உங்களுக்கு குழந்தை பிறந்து ஐந்து வயது ஆனபிறகு இமைய மலையில் நான் இருக்கும் இடத்திற்கு அனுப்பி விடுங்கள்" என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார். அதே போல் அந்த குழந்தை ஐந்து வயது ஆனபிறகு இமைய மலைக்கு செல்கிறது. அந்த குழந்தைதான் ராமா. அதன் பிறகு ராமாவுக்கும் அவருடைய குருவுக்கும் நடக்கும் விவாதம், சண்டை, கல்வி, அவர்களை பார்க்க வரும் மனிதர்கள், உணர்தல், செயல் படுத்தல் என்று விரிகிறது L.W.T.H.M.

துறவி என்பவர் மந்திரவாதி கிடையாது என்றும், தண்ணீரில் நடப்பது, ஒரேநாளில் நோயை குணப்படுத்துவது போன்ற ஜிம்மிக்ஸ் வித்தையெல்லாம் அவர்களால் செய்ய முடியாது என்றும் அவர்களும் நம்மை போன்ற சாதாரண மனிதர்களே என்பதை உணர்த்துகிறது.

கடவுளை நேரில் காண்பது என்பது தியான நிலையில் இருக்கும் போது உங்களை நீங்கள் முழுமையாக உணரும் போது இறைவனை பார்க்க முடியும் என்று சொல்கிறது இந்நூல். Well written.

தீண்டாமை என்பது இந்து மதத்தில் கிடையாது என்றும் அதை உருவாக்கியவர்கள் ஹிந்துக்களே அல்ல என்று சொல்கிறார் "ராமா".

மிக முக்கியமாக, போலி சாமியார்களையும், மதத்தையும் வைத்து பிழைப்பு நடத்தும் வட இந்திய அரசியல்வாதிகளையும் சும்மா கிழி கிழி என்று கிழிக்கிறார் "ராமா".

இமைய மலை பற்றியும், அங்குள்ள துறவிகளின் வாழ்க்கை, அனுபவம் மற்றும் சுவாரசியமான கதைகள் மூலம் ஒரு  நல்ல வாசிப்பு அனுபவத்தை தருகிறது இந்நூல்.

Finally, a well written book.

இந்நூல் தமிழ், ஆங்கிலம், இரண்டிலும் கிடைக்கிறது.

No comments:

Post a Comment