Friday, 3 August 2018

Dune

Dune.

Science fiction நாவல்களின் உச்சம் என்று கொண்டாடப்படும் நாவல்தான் Dune. எழுதியவர் Frank Herbert.

Atreides மற்றும் Harkonnen என்று இரண்டு குழுக்கள். Atreides ராஜாவான Duke Leto வை Harkonnen இனத்தினர் கொல்கிறார்கள். Letoவின் துணைவி Jessica மற்றும் அவர்களின் மகன் Paul அங்கிருந்து தப்பித்து பாலைவனத்துக்கு வருகிறார்கள். அங்கு வசிக்கும் Fremen என்ற பழங்குடியினர் அவர்களுக்கு உதவ முன் வருகிறார்கள். பின்னர் Atreides மற்றும் Harkonnenக்கு நடக்கும் யுத்தத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதே 670 பக்க நாவல்.

Science fiction உலகத்தை நன்றாக கட்டமைத்திருக்கிறார் Frank Herbert. இந்த உலகத்தில் தண்ணீரே கிடையாது. ஆகவே இறந்து போன உடலில் இருந்து 78 சதவீத தண்ணீரை தொழில்நுட்பம் மூலம் வெளியேற்றி ஒரு மிகப்பெரிய ராட்சச கிடங்கில் சேகரிக்கிறார்கள். மனிதர்கள் இறக்க இறக்க கிடங்கு தண்ணீரால் நிரம்பி கொண்டே இருக்கும்.

இந்த பாலைவனத்தில் ராட்சச மண்புழுக்கள் வசிக்கிறது. ஒவ்வொரு புழுவும் டைனோசர் போல் இருக்கிறது. ஒரே நேரத்தில் ஆயிரம் மனிதர்களை விழுங்கக் கூடியது. Fremen பழங்குடியினர் சில உத்திகளை கையாண்டு அந்த புழுக்கள் மீது அமர்ந்து பாலைவனத்தை கடக்கும் இடமும், ராட்சச மணல் புயல் பாலைவனத்தை தாக்கும் இடமும் நல்ல fantasy பக்கங்கள்.

ஒற்றர்கள் மூலம் Duke கடத்தப்படுவதும், Jessica அதிகாலையில் எழுந்த பிறகு தான் கடத்தப்பட்டிருப்பது தெரியும் இடமும் செம. பின்னர் Duke விஷ வாயுவை வைத்து எதிரிகளை கொல்லும் இடமும் நல்ல Science fiction.

Jessica பழங்குடி மக்களின் தலைவியாக பதவி ஏற்கும் இடமும் Paul தலைவனாக அறிவிக்கப்பட்ட உடன்  ராட்சச தண்ணீர் கிடங்கை போய் பார்க்கும் இடமும் நச். Class. பிரமாண்டம்.

ஆனால் இதை No.1 Science fiction நாவல் என்று சொல்ல முடியாது. ஒரு பக்கத்தில் முடிய வேண்டிய உரையாடல்களை நாலு பக்கங்களுக்கு நீண்டு இருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. ராஜா ராணி, கத்தி சண்டை, வைப்பாட்டிகள் என்று பின் நவீனத்துவமும் fantasyயும்தான் அதிகம் தென்படுகிறது.  Jessicaவும் Paulம் தப்பிக்கும் இடமும் சுமார்தான். ராட்சச மண் புழுக்களையும், மணல் புயலையும் வைத்து ஒரு மிகப்பெரிய பேரழிவும் action காட்சிகளும் வரும் என்று பார்த்தால் ஏமாற்றமே.

ஆனால்...

670 பக்க நாவலை எந்த லாஜிக் ஓட்டைகளும் இல்லாமல் எந்த  குழப்பமும் இல்லாமல், சுவாரசியமாக சொல்லி இருப்பது ஒரு மிகப்பெரிய சாதனை. நாவலில் அட்டகாசமான காட்சிகள் நிறைய இருக்கிறது. முக்கியமாக இதன் structure. நாவலை வாசித்து முடிக்கையில் ஒரு நல்ல இதிகாசத்தை வாசித்த அனுபவத்தை ஏற்படுத்திவிடுகிறது Dune. அதுதான் இந்த நாவலின் வெற்றி.

இந்த நாவல் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் இதற்குப் பிறகு இன்னும் நான்கு பாகங்களை எழுதியிருக்கிறார் Frank Herbert.

Science fiction genreல் இது மிக மிக முக்கியமான ஒரு நாவல்.

No comments:

Post a Comment