Friday, 3 August 2018

சு.ரா., காலச்சுவடு, ஒரு புளியமரத்தின் கதை

தமிழின் மிக முக்கியமான நாவல் "ஒரு புளியமரத்தின் கதை". ஊருக்கே நிழலைத் தந்துக் கொண்டிருக்கும் ஒரு புளியமரம், அதை சுற்றியுள்ள மனிதர்களின் பேராசையாலும், சுயநலத்தாலும் ஒரு மரம் எப்படி வெட்டி வீழ்த்தப்படுகிறது என்பதுதான் நாவல்.

நல்ல concept. ஆனால் அழுத்தம் இல்லாத சம்பவங்களாலும், சுவாரசியம் இல்லாத கிளைக் கதைகளாலும் அந்த மரம் வெட்டப்படும் போது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிடுகிறது.

எனினும் ஒரே மாதிரியான நாவல்கள் வந்துகொண்டிருந்த போது தன்னுடைய Out of Box thinking மூலம்  தமிழ் இலக்கியத்தில் ஒரு பெரிய அலைய ஏற்படுத்தியவர். ஏகப்பட்ட மனிதர்களை தமிழ் இலக்கியத்தை நோக்கி திருப்பியவர். எழுத்தாளர்கள்  சினிமாக்கார்களிடம் விலைக்கு போய்க்கொண்டிருந்த சூழலில் எக்காரணத்தைக் கொண்டும் தன் இலக்கிய ஆளுமையை விட்டுக் கொடுக்காத கலை ஆளுமை. மேலும் அவருடைய காலச்சுவடு பதிப்பகம் தரமான நாவல்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் என்று தமிழ் வாசகர்களுக்கு வழங்கி வருகிறது.

No comments:

Post a Comment