Friday, 3 August 2018

நீருக்கடியில் ‌சில குரல்கள்

தமிழில் வன்முறை, நிழல் உலகம் போன்றவற்றை மையமாக வைத்து எழுதப்படும் நாவல்கள் குறைவு. இல்லை என்றே சொல்லலாம். இப்படி இருக்கையில் கச்சிதமாக, சுவாரசியமாக வந்திருக்கும் ஒரு நாவலே "நீருக்கடியில் ‌சில குரல்கள்". எழுதியவர் Prabhu Kalidas.

தாயைப் பிடிக்காத ஒருவனும் தந்தையைப் பிடிக்காத இன்னொருவனும் வீட்டை விட்டு வெளியேறி இறுதியில் வன்முறையோடு தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வதுதான் கதை.

பிரபு காளிதாஸ் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர் என்பதாலோ என்னவோ நாவல் முழுக்க நிறைய visuals.

நாவலின் சிறந்த இடங்கள்:

1. கதிரவன் கணேசனிடம் அடியாளாக சேரும் இடம்.
2. அடியாளாக சேர்ந்த பிறகு கதிரவன் மதுக்கடையில் உளவு பார்க்கும் இடம்.
3. பழியை ஏற்றுக் கொண்டு சிறை செல்லும் இடம்.
4.கதிரவன்-தர்மலிங்கம்-தியேட்டர் காட்சிகள்.
5. ஒரு கதாபாத்திரம் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி.
6.சுந்தரை சிறையில் இருந்து ரவி அழைத்து வரும் இடங்கள்.
7. கதிரவனின் தாயின் கள்ளத் தொடர்பு காட்சிகள்.

நாவலின் மிகப் பெரிய ப்ளஸ், ஒவ்வொரு அத்தியாயமும் அட்டகாசமாக ஆரம்பித்து நன்றாக முடிகிறது. I like it.

ஆனால் மூன்றே மூன்று குறைகள்.
1. இரண்டு கதைகளும் இணையவில்லை.
2.சுந்தரின் வயது குழப்பமாக இருக்கிறது.
3. இரண்டாவது கதை சீர்திருத்த பள்ளியில் முடிவது ஏற்கனவே நிறைய தெரிந்த காட்சிகள்தான்.

ஆனால் இவை அனைத்தையும் மீறி நாவல் ஒரு க்ரைம் த்ரில்லரைப் போல பயனிக்கிறது. வறட்சியான தமிழ் இலக்கியத்தில் இந்த மாதிரியான நாவல்கள் தான் தேவை.   Mean Streets,  Gangs of Wassypur போன்ற தரமான திரைப்படமாக எடுக்க முடியும்.

Now it becomes one of my favourite novella.

மற்றபடி வன்முறை அழகியலோடு வந்திருக்கும் ஒரு சுவாரசியமான நாவல்
நீருக்கடியில் ‌சில குரல்கள்.

Note: சாரு நிவேதிதாவின் முன்னுரை class. மிக முக்கியமான ஒன்று.

No comments:

Post a Comment